நாத்தாண்டிய, மினுவாங்கொடையிலும் முஸ்லிம்கள் மீது காடையர் வெறியாட்டம்! – இருவர் பலி; கடைகள், வீடுகள் நாசம்
புத்தளம் மாவட்டத்திலுள்ள நாத்தாண்டிய, கொட்டாரமுல்லைப் பகுதிகளிலும், கம்பஹா மாவட்டத்திலுள்ள மினுவாங்கொடையிலும் சிங்கள வன்முறைக் கும்பல் நேற்று அட்டகாசம் புரிந்துள்ளது.
முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் சிலவற்றை இந்தக் கும்பல் அடித்து நொறுக்கித் தீயிட்டுக் கொளுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் சிக்கி முஸ்லிம்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
கொட்டாரமுல்லையைச் சேர்ந்த அமீர் என்பவரும், மினுவாங்கொடையைச் சேர்ந்த பௌசுல் ஹமீத் என்பவரும் உயிரிழந்துள்ளனர்.