பாக்கு நீரிணையை சைக்கிளில் கடந்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் பிரதாபன் தர்மலிங்கம்!


பாக்கு நீரிணையை சைக்கிளில் கடந்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் வவுனியாவைச் சேர்ந்த பிரதாபன் தர்மலிங்கம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
சுமார் 53 முதல் 82 கீலோ மீற்றர் அகலம் கொண்ட இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் பாக்கு நீரிணையை பலர் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ள நிலையில், இவர் வித்தியாசமான முறையில் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கான முயற்சிகளை கடந்தாண்டே இவர் மேற்கொண்ட போதும், கொரோனா அலை காரணமாக தாமதம் ஏற்பட்டது.
தனது முயற்சி வெற்றி பெற உங்கள் அன்பு, ஆதரவு, ஆசிகளை எதிர்பார்த்திக் காத்திருப்பதாக தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அவர் முயற்சி பெற்று, கின்னஸ் சாதனை படைத்து, எமது தேசத்துக்கு பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *