நாளை கடும் வெப்பம் நிலவும்!
குருணாகலை, புத்தளம், மன்னார், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் நாளை (20) கடும் வெப்பத்துடன்கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
எனவே, அதிக வெப்பம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும்,அதிக நீர் பருகுவதுடன் நிழலான இடங்களில் தங்கியிருக்குமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் நிலவும் கடும வறட்சிகாரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீரைப்பெருவதிலும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுவருகின்றனர்.