சுதந்திர தினம் எமக்கு கரிநாள்! – கேப்பாப்பிலவு மக்கள் தெரிவிப்பு

இலங்கையின் 71ஆவது சுதந்திர தினம் நாளை 4ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்த நாளை கரிநாளாக நினைவுகொள்ளவிருப்பதாக கேப்பாப்பிலவு நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில்,

“எங்கள் தாய்நிலம் எங்களுக்கு வேண்டும். எங்கள் நிலத்தில் நாங்கள் வாழவேண்டும் என்று நோக்கோடு, எங்கள் நிலத்தைக் கேட்டு, இலங்கையின் இரண்டு சுதந்திர தினத்தைச் சந்தித்த – சுதந்திரமில்லாத மக்களாக நாம் இந்த மண்ணில் வீதியோரத்தில் தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றோம்.

இம்முறை இலங்கையின் சுதந்திர நாளை துக்கநாளாக, கறுப்புப் பட்டி அணிந்து நினைவுகொள்ளவிருக்கின்றோம்.

இது எங்கள் துக்கநாள். எங்கள் மண்ணில், எங்கள் வீடுகளில், எங்கள் பொருளாதாரத்தை வைத்து எப்போது வாழ்கின்றோமோ அன்றுதான் எங்களுக்குச் சுதந்திர நாள்” – என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *