குட்டி சபைகளிலும் காலைவாருகிறது சு.க. – 20 சபைகளை ஐ.தே.க.இழக்கும் அபாயம்!

ஐக்கிய தேசியக்கட்சியின் கட்டுப்பாட்டின்கீழுள்ள 20 உள்ளாட்சி சபைகளில் விரைவில் ஆட்சிமாற்றம் இடம்பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 20 சபைகளில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களின் உதவியுடனேயே ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியமைத்தது.

எனினும், ஐ.தே.கவுக்கும்,  சு.கவுக்குமிடையிலான ‘தேசிய அரசு’ உறவு  தற்போது முறிவடைந்துள்ளதால், ஐ.தே.கவுக்கான ஆதரவை குட்டி சபைகளிலும் சு.க. மீளப்பெறுவதற்கு உத்தேசித்துள்ளது.

அத்துடன்,  ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே குட்டிசபைகளில் ஆட்சிமாற்றம் இடம்பெறவுள்ளது.

2018 பெப்ரவரி மாதம் கலப்பு தேர்தல் முறையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மஹிந்த அணி பெரு வெற்றிபெற்றது. குறித்த தேர்தல் முறையால் பல சபைகளில் தொங்குநிலையே உருவானது. இதையடுத்தே  கூட்டரசு அமைக்கப்பட்டது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *