பேருவளையில் ஹெரோயினுடன் மூவர் சிக்கினர்!
பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகல்கந்த பகுதியில் ஹெரோயினுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பேருவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 73 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.