காதலன் கண்முன் ஆற்றில் குதித்து காதலி தற்கொலை!

மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 16 வயது சிறுமியைக் காப்பாற்ற இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்போதும் குறித்த சிறுமியைக் காப்பாற்ற முடியாமல் போன சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது என மட்டு.தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா, பூநொச்சிமுனை வீதி, 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 16 வயதுடைய கிருஸ்ணபிள்ளை கிருஷாந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி ஜி.சீ.ஈ. சாதாரண தரத்தில் கல்வி கற்று வருகின்ற நிலையில் சம்பவதினமான நேற்றுப் பிற்பகல் மட்டக்களகப்பு நகருக்கு சென்று விண்ணப்பம் ஒன்றை நிரப்ப செல்வதாக வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்தநிலையில் குறித்த சிறுமி ஆரையம்பதியைச் சேர்ந்த 23 வயதுடைய ரவீந்திரன் வசந்தன் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ள நிலையில் இருவரும் சம்பவதினமான நேற்று பிற்பகல் 2 மணியளவில் கல்லடி பாலத்தில் வைத்து சந்தித்துள்ளனர்.

இதன்போது காதலனுக்கும் காதலிக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் இடம்பெற்றவேளை காதலி பாலத்தில் இருந்து திடீரென ஆற்றில் குதித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து காதலனுக்கு நீந்தத் தெரியாததால் காதலனின் நண்பன் குறித்த சிறுமியைக் காப்பாற்ற ஆற்றில் குதித்த போதும் அவரைக் காப்பாற்ற முடியாமல் அவர் நீந்தி கரைசேர்ந்தார் எனவும், அவரின் சடலத்தைக் காணமுடியவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸார் குறித்த காதலனை கைதுசெய்துள்ளதுடன் ஆற்றில் குதித்த சிறுமியின் சடலத்தைத் தேடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக விசாரணைகளை மட்டு. தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *