வழிபட சென்ற பிரதமர் மஹிந்தவுக்கு கடும் எதிர்ப்பு!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தனது இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார். திங்கட்கிழமை (9) முக்கிய அறிவிப்பொன்றை விடுவார் உள்ளிட்ட செய்திகள் கடந்த சில நாட்களாக பரவின.
அதுமட்டுமன்றி பாராளுமன்றத்தில் கடந்த 5 அல்லது 6 ஆம் திகதியன்று உரையாற்றுவார் என்றும் தகவல்கள் கசிந்திருந்தனர். எனினும், பிரதமர் உரையாற்றவில்லை.
இதனிடையே பதவி விலகுமாறு ஜனாதிபதி தனக்கு அறிவுறுத்தவில்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக அனுராபுரத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (08) சென்றிருந்தார். பிரதமரின் வருகைக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த , அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்