வழிபட சென்ற பிரதமர் மஹிந்தவுக்கு கடும் எதிர்ப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தனது இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார். திங்கட்கிழமை (9) முக்கிய அறிவிப்பொன்றை விடுவார் உள்ளிட்ட செய்திகள் கடந்த சில நாட்களாக பரவின.

அதுமட்டுமன்றி பாராளுமன்றத்தில் கடந்த 5 அல்லது 6 ஆம் திகதியன்று உரையாற்றுவார் என்றும் தகவல்கள் கசிந்திருந்தனர். எனினும், பிரதமர் உரையாற்றவில்லை.

இதனிடை​யே  பதவி விலகுமாறு ஜனாதிபதி தனக்கு அறிவுறுத்தவில்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,   வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக அனுராபுரத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (08) சென்றிருந்தார். பிரதமரின் வருகைக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த , அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *