இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி!

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி 1997 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

மார்ச் மாதத்தில், தினமும் சுமார் 5,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்தனர்.
ஆனால் ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாகக் குறைந்து வருகிறது.

இதனிடையே, இலங்கைக்கு வரும் விமானங் களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள் ளதாக இணையத்தில் படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *