மயக்க மருந்து தடவிய மாஸ்க்!

சென்னையில் பெண் ஒருவர் மயக்க மருந்து தடவிய மாஸ்க்-யை தந்து நகைகளை திருட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேட்டை சேர்ந்த திவ்யா என்ற பெண், பாரிமுனை கந்தகோட்டத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் மாஸ்க் இல்லாமல் பயணித்துள்ளார். அப்போது அதே ஷேர் ஆட்டோவில் கைக்குழந்தையுடன் பயணித்த பெண் ஒருவர், மயக்க மருந்து தடவிய மாஸ்க்-யை திவ்யாவுக்கு கொடுத்துள்ளார்.  

அந்த மாஸ்க்-யை அணிந்த திவ்யாவுக்கு மயக்கம் ஏற்பட்டதால் சாந்தோம்வரை ஷேர் ஆட்டோவிலேயே சென்றுள்ளார். பின்னர் மயக்கம் தெளிந்ததும் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த நிலையில், பெண் ஒருவர் மயக்க மருந்து தடவிய மாஸ்க்-யை தந்து தன்னுடைய நகைகளை திருட முயற்சித்ததாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மாஸ்க் கொடுத்து நகைகளை திருட முயன்ற சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *