நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா?
நாடு முழுவதும் எதிர்வரும் நாட்களில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என சமூகவலைத்தளங்களில் பரவிவரும் விடயங்கள் உண்மைக்கு புறம்பானது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
மேலும் ,எதிர்வரும் 30 நாட்களுக்கு தேவையான எரிபொருட்கள் கையிருப்பில் காணப்படுவதாகவும், 13 நாட்களில் 35,000 மெட்ரிக் டொன் எரிபொருள் கொண்ட கப்பலொன்று இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.