இலங்கையில் கொரோனா மரணங்கள் 3313 ஆக அதிகரிப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 45 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
30 ஆண்களும், 15 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 313 ஆக அதிகரித்துள்ளது.