எட்டாம் திகதி பசில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு!

பசில்ராஜபக்ச எட்டாம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுசெயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்தகெட்டகொட பதவி விலகியதை தொடர்ந்து உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ,நாளை வர்த்தமானி அறிவித்தல் வெளியானால் 8 ம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பசில் பதவிப்பிரமாணம் செய்வார் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *