ஒசுசல நிறுவனத்துக்கு தற்காலிக பூட்டு!

தியத்தலாவ ஒசுசல நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதால், குறித்த ஒசுசல நிறுவனத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்ததாக, ஹப்புதளை பொதுசுகாதார பரிசோதகர் எஸ். சுதர்சன் தெரிவித்துள்ளார்.

இத்துடன் , அங்கு பணியாற்றும் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வர்த்தக நிலையத்துக்கு வந்துச் சென்றவர்கள் குறித்து, விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *