பூகொடயில் வெடிப்பு – மக்கள் அல்லோலகல்லோலம்
பூகொட பகுதியில் இன்று முற்பகல் நடைபெற்ற வெடிப்பு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன.
பூகொட நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள காணியொன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் குண்டு தாக்குதல்களால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.