6 இடங்களில் குண்டுகள் வெடிப்பு! முப்படைகளும் களத்தில்!!

நாட்டில் இன்று காலை 8.45 இற்கும் 9.15 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் 6 வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கொழும்பில் நான்கு வெடிப்புச் சம்பவங்களும், மட்டக்களப்பு, நீர்க்கொழும்பு ஆகிய பகுதிகளிலும் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

குறித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸாரும், புலனாய்வுத் துறையினரும் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மட்டக்களப்பு தேவாலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் குறைந்தபட்சம் 27 பேர் பலியாகியுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற சம்பவங்களில் 25 பேர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

பொதுமக்களுக்கு  அறிவித்தல் 

வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். விசாரணை, மீட்புபணி உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு தடங்கல் ஏற்படுத்த வேண்டாம் எனவும் கோரிக்கை.

கொழும்பு – நகரில் உள்ள பிரபலமான மூன்று,  ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் இன்று காலை குண்டுவெடிப்புகள்  இடம்பெற்றுள்ளன.

கொழும்பு நகரின் மத்தியில்  கோட்டை பகுதியில் உள்ள ஷங்ரி-லா, சினமன் கிரான்ட், கொழும்பு கிங்ஸ்பெரி ஆகிய ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் குண்டுகள் வெடித்துள்ளன.

இந்தச் சம்பவங்களில் விடுதிகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

பலர் இந்தச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், காயமடைந்துள்ளனர்.

கொழும்பு வைத்தியசாலையில் காயமடைந்த பலர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். இடபற்றாக்குறை காரணமாக பலர் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *