ஐ.நாவுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவேண்டும்! – இலங்கையை வலியுறுத்துகின்றது பிரிட்டன்
மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக இலங்கை சில சாதகமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளது என்று பிரிட்டன் வெளிவிவகார பணியக அமைச்சர் அஹமட் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தொடரில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“நிலையான நல்லிணக்கத்தை எட்டுவதற்கு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை முழுமையாக நிறைவேற்ற பிரிட்டன் ஊக்குவிக்கின்றது.
மேலதிக காணிகளை விடுவிப்பதற்கு எடுத்துள்ள முடிவையும், இழப்பீடு வழங்கும் செயலகத்தை உருவாக்கும் முடிவையும் பிரிட்டன் பாராட்டுகின்றது.
தற்போதைய 40ஆவது கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை பிரிட்டன் முன்வைக்கும்” – என்றார்.