சனத் ஜயசூரியவுக்கு கிரிக்கெட் நடவடிக்கையில் ஈடுபடத் தடை!
இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவுக்கு அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு இரண்டு வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபையால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கட் சபையின் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் இரண்டு சரத்துக்களை மீறியமை தொடர்பிலேயே அவருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.