பொறுப்புக்கூறலில் வேகமான முன்னேற்றம் எதுவும் இல்லை! – இலங்கை மீது ஐ.நா. பாய்ச்சல்
பொறுப்புக்கூறல் செயல்முறையில் இலங்கை வேகமான முன்னேற்றங்களைக் காண்பிக்கவில்லை என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஜெனிவாவில் நேற்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட், பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போதே, இலங்கை பொறுப்புக்கூறல் செயல்முறைகளில் வேகமான முன்னேற்றங்கள் எதையும் காண்பிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
பொறுப்புக்கூறலில் இலங்கை மெதுவாகவே செயற்படுகின்றது எனவும், சீரான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.