தமிழில் புலமை பெற்றவரே ஜனாதிபதியாக வேண்டும்! – குமார வெல்கம வலியுறுத்து
தற்போது நாட்டில் காணப்படுகின்ற சூழ்நிலைக்கு அமைய ஜனாதிபதித் தேர்தலே நடைபெற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பேசுகின்ற தமிழ்மொழி தொடர்பில் தௌிவு பெற்ற ஒருவரே ஜனாதிபதியாக வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.