எதிர்க்கட்சித் தலைவர் பதவி: பேச்சு மூலம் தீர்வு காண்போம்! – மாவை எம்.பி. கூறுகின்றார்

“நாங்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரத்தில் இப்போதே எவரொருவர் தொடர்பிலும், எவ்வித கருத்துக்களையும் கூற விரும்பவில்லை. இவ்விடயம் தொடர்பில் கலந்தாலோசித்து தீர்வு காணப்படும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் நாளை 8 ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பதாக இடம்பெறும் எமது கட்சிக் கூட்டம், கட்சித் தலைவர்கள் கூட்டம் என்பவற்றில் பேச்சு நடத்தித் தீர்மானம் எடுப்போம் எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *