முஸ்லிம்களைத் தாக்கியவர்களை மீட்டு தன் வாகனத்தில் ஏற்றிச்சென்ற தயாசிறி!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, முஸ்லிம்களைத் தாக்கி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிங்கள வன்முறையாளர்களை மீட்டுள்ளார்.
ஜனாதிபதி கொலைச் சதியை அம்பலப்படுத்திய நாமல் குமாரவும் அங்கு நின்ற காட்சி வெளியாகியுள்ளது.
சந்தேகநபர்களைப் பிணையில் விடுவித்த தயாசிறி எம்.பி., அவர்களைத் தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றார் என்று அங்கு நின்ற செய்தியாளர்கள் தெரிவித்தனர்.