இயல்பு நிலையை ஏற்படுத்த ஜனாதிபதி உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் முன்வரவேண்டும்! – சபாநாயகர் விசேட அறிக்கை
“நாட்டின் அரசியல் நெருக்கடியால் சமூக, பொருளாதார நிலைமைகள் மோசமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்த ஜனாதிபதி உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் உடனடியாக முன்வரவேண்டும். நாடாளுமன்ற சம்பிரதாயங்களின் அடிப்படையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் நான் எடுத்துள்ளேன்.”
– இவ்வாறு சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சிங்களத்தில் இரண்டு பக்கங்களில் வெளிவந்துள்ள சபாநாயகரின் அறிக்கை இந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.