சட்டமா அதிபருக்கு எதிராக ஹக்கீம் போர்க்கொடி! – இடைக்காலத் தடையுத்தரவை எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவிப்பு
“நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“பிரதி மனுதாரர்களுக்கு வழக்கு சம்பந்தமான அறிவிப்பும், இடைக்காலத் தடையுத்தரவும் கிடைக்கும் எனறு நாம் எதிர்பார்க்கின்றோம்” எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
“சட்டமா அதிபர் அரசு , ஜனாதிபதி சார்பில் தனது வாதப்பிரதிவாதங்களை இன்று முன்வைத்துள்ளார். இதனடிப்படையில் அவர் அரசமைப்பின் வெவ்வேறு உறுப்புரைகளை தனித்தனியாக அர்த்தம் கற்பிப்பதற்கு முயற்சிக்கின்றார்” என்றும் ரவூப் ஹக்கீம் குற்றம்சாட்டினார்.