வாட்டி வதைக்கின்றது ‘வறட்சி’; 56,105 பேர் மோசமாகப் பாதிப்பு!
கடும் வறட்சி காரணமாக புத்தளம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தமாக 15,829 குடும்பங்களைச் சேர்ந்த 56,105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 7,795 குடும்பங்களைச் சேர்ந்த 27,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் 7,350 குடுபங்களைச் சேர்ந்த 25,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்முகாமைத்துவ மத்திய பிரிவு தெரிவித்துள்ளது.