அரசமைப்பின்படி நான்தான் பிரதமர்! நாடாளுமன்றம் அதனை முடிவு செய்யும்!! – மைத்திரிக்கு ரணில் கடிதம் மூலம் பதிலடி
“அரசமைப்பின் பிராகாரம் நான்தான் பிரதமர். நாடாளுமன்றம் அதனை முடிவு செய்யும்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரதமர் பதவியிலிருந்து ரணில் நீக்கப்பட்டுள்ளார் என்பதை கடிதம் மூலம் அவருக்கு ஜனாதிபதி மைத்திரி அறிவித்திருந்தார்.
இதற்குப் பதில் கடிதத்தை ஜனாதிபதிக்கு ரணில் அனுப்பியுள்ளார். அதிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.