பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளீர்கள்! – ரணிலுக்கு மைத்திரி கடிதம்
பிரதமர் பதவியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டுள்ளார் என்பதை கடிதம் மூலம் அவருக்கு அறிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
“அரசமைப்பின் பிரகாரம் எனக்குள்ள அதிகாரங்களின்படி உங்களைப் பிரதமராக நியமித்தேன். அதேபோல் பிரதமர் பதவியில் இருந்தும் தற்போது தங்களை நீக்கியுள்ளேன்” என்று அந்தக் கடிதத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.