100 கார்களை 100 ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய நிறுவனம்!

 

சென்னையை சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்று தன்னுடைய 100 ஊழியர்களுக்கு 100 காரை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளது.

100 கார்களை பரிசளித்த ஐடி நிறுவனம்
சென்னை சேர்ந்த Ideas2IT என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வெற்றிப் பாதைக்கு சிறப்பாக பங்களித்த தங்களுடைய 100 ஊழியர்களுக்கு 100 கார்களை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளது.

10 ஆண்டுகளுக்கு மேலாக நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் 100 ஊழியர்களுக்கு 100 Maruti Suzuki காரை Ideas2IT நிறுவனம் வழங்கியுள்ளது.

Ideas2IT நிறுவனத்தில் 500 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நிறுவனத்திற்கு கிடைத்த லாபத்தை ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்வதே எங்களின் திட்டம் என்று நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் ஹரி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Ideas2IT நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் முரளி விவேகானந்தன், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஊழியர்கள் நிறைய கடின உழைப்பை செலுத்தியுள்ளனர், அவர்களுக்கு நிறுவனம் காரை வழங்கவில்லை, ஊழியர்கள் அவர்களது கடின உழைப்பின் மூலம் இந்த காரை வாங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

காரை பரிசாக வழங்குவது என்பது முதல் படி தான். தங்கள் கடின உழைப்பை வெளிப்படுத்தும் ஊழியர்களுக்கு இது போன்ற பல திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என தலைவர் முரளி விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தங்களது 38 ஊழியர்களுக்கு நிறுவனத்தின் 33 சதவீத பங்குகளையும் ஒதுக்கி நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் மாற்றி ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த மற்றொரு ஐடி நிறுவனம் தங்களுடைய 5 மூத்த நிர்வாகிகளுக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு BMW காரை பரிசாக வழங்கி சிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *