காஸாவிற்கு 100 மில்லியன் டொலர் GCC அவசர உதவி
இஸ்ரேல் ராணுவ வீரர்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவுக்கு வளைகுடா நாடுகள் 100 மில்லியன் டொலர்களை அவசர உதவியாக அறிவித்துள்ளன.
செவ்வாயன்று மஸ்கட்டில் நடந்த வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டத்தில் காஸா பகுதிக்கு 100 மில்லியன் டாலர் அவசர உதவி அறிவிக்கப்பட்டது.
ஏனெனில் காஸாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. காசாவில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய ஆறு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளின் உயர்மட்ட தூதர்கள் மஸ்கட்டில் சந்தித்தனர்.
வீடற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த காஸா மருத்துவமனை வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய ஜிஹாத்தின் தவறான ராக்கெட் மருத்துவமனையை தாக்கியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் கடந்த 11 நாட்களுக்கு முன்பு பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் தீவிரவாதிகளால் 1,400 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஸாவில் இஸ்ரேலின் பதிலடி குண்டுத் தாக்குதலில் 3,000 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இந்த அவசர உதவியை காஸாவிற்கு உடனடியாக வழங்க GCC நாடுகள் முடிவு செய்தன. வளைகுடா நாடுகள் எகிப்து எல் அரிஷுக்கு விமான உதவிகளை அனுப்புகின்றன.
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லாத ரஃபா எல்லைப் புள்ளி வழியாக உதவிகளை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. எல் அரிஷிலிருந்து ரஃபா வரையிலான 40 கிலோமீட்டர் சாலையில் நூற்றுக்கணக்கான லொறிகள் பயணித்ததாக உதவி அதிகாரிகள் தெரிவித்தனர். காசாவில் பொதுமக்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் பொதுச் செயலாளர் ஜாசிம் முகமது கோரினார்.