சிறுவர்களிடையே நோய்கள் பரவும் அபாயம்

நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து சிறுவர்களிடையே நோய் நிலைமை அதிகரித்து வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கு வயிற்று போக்கு, டெங்கு மற்றும் எலி காய்ச்சல் போன்ற நோய் நிலைமை ஏற்படக் கூடிய வாய்ப்பு நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சிறுவர்களுக்கு மூன்று நாட்களுக்கு மேல் நோய் நிலைமை தொடருமாயின் உடனடியாக வைத்தியர் ஒருவரை தொடர் கொள்ளுமாறும் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *