200 வருட நீதித்துறைக்கு கிடைத்த உன்னதமான உயரிய பெருவெற்றி! – சுமந்திரன் எம்.பி. வரவேற்பு
உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இலங்கையின் 200 வருட நீதித்துறைக்குக் கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி இதுவென ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்த ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிர்வரும் 07ஆம் திகதி வரை இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களைப் பரிசீலித்த உயர்நீதிமன்றம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அத்தோடு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட சகல மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதித்துள்ளது.
இந்தநிலையில் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையின் நீதித்துறைக்கு நவம்பர் 13ஆம் திகதி (நேற்று) முக்கியமான நாள். ஜனாதிபதியின் நாடாளுமன்றக் கலைப் புக்கு எதிராக உயர்நீதிமன்றம் நேற்று விடுத்த உத்தரவு இலங்கை யின் 200 வருட கால நீதித்துறைக் குக் கிடைத்த ஒரு மாபெரும் வரலாற்று வெற்றி” – என்றார்.