இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் மின் கட்டணம்!

மின்சார பாவனையாளர்களிடமிருந்து சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை அறவிடுவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

2022 ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் இந்த கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி எவ்வாறு மின்சார கட்டணங்களை பாதிக்கிறது என்பது பற்றி இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கிறது.

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தின்படி, இலங்கை மின்சார சபையின் மின்சாரம் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கு உட்பட்டது.

இதன்படி, இலங்கை மின்சார சபையில் மின்சாரம் பெறும் தரப்பினரால் மின்சாரம் கொள்வனவு செய்வதற்கு மேற்படி வரி அறவிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *