பேலியகொட,மினுவங்கொடயில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4050 ஆக அதிகரித்துள்ளது!
இலங்கையில் மேலும் 92 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த அனைவரும் பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நேற்றைய தினத்தில் மாத்திரம் 368 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4050 ஆக அதிகரித்துள்ளது.