மைத்திரியின் பாதுகாப்புக்குச் சென்ற இராணுவத்தின் டிபெண்டர் பனை மரத்துடன் மோதியது! இருவர் பலி; நால்வர் படுகாயம்!!

முல்லைத்தீவு, நெடுங்கேணி – தட்டாமலை வீதியில் இராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மேஜர் ஒருவரும், கோப்ரல் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 4 இராணுவ அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்புக்காகச் சென்ற இராணுவ கொமாண்டோ படையணி வாகனங்கள் பாதுகாப்புப் பணியை நிறைவு செய்துவிட்டு இன்று மதியம் வவுனியா நோக்கிப் பயணித்தபோதே அதில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நெடுங்கேணி – தட்டாமலை வீதியில் உள்ள வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் வீதியில் அருகில் நின்ற பனை மரத்துடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் 6 இராணுவ அதிகாரிகள் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக அம்புலன்ஸ் வாகனங்களில் வவுனியா பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *