அச்சிடப்பட்ட குடிநீர் கட்டணப் பட்டியல் வழங்குவது நிறுத்தம்!

அச்சிடப்பட்ட நீர் கட்டணப் பட்டியல் வழங்குவதை நிறுத்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கவனம் செலுத்தியுள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு அனைத்து நீர் பாவனையாளருக்கும் இ-தண்ணீர் பட்டியல் வழங்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் உதவிப் பொது முகாமையாளர் – டி.டபிள்யூ.என். சுரஞ்சித் தெரிவித்தார்.

ஒன்லைன் தொழில்நுட்பம் மூலம் தண்ணீர் கட்டணம் செலுத்தும் வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *