தமிழர் தாயகமெங்கும் இன்று தியாகி திலீபன் நினைவேந்தல்!

 

தியாக தீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளன.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ். நல்லூரில் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும்.

அதேவேளை, தமிழர் தாயகத்தின் பல பகுதிகளிலும், புலம்பெயர் தேசங்களிலும் இன்று திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் எழுச்சிபூர்வமாக இடம்பெறவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *