வைரஸ் தொற்றுகள் பரவக்கூடிய சாத்தியம் அதிகரிப்பு

அண்மைய வானிலை காரணமாக வைரஸ் தொற்றுகள் பரவக்கூடிய சாத்தியம் குறித்து சுகாதார அதிகாரிகள் பொது மக்களை எச்சரித்துள்ளனர்.

வெப்ப நிலையில் ஏற்படும் நிலையற்ற தன்மை, காலநிலையில் ஏற்படும் மாற்றமே இதற்கு பிரதான காரணம் என்று நம்பப்படுகிறது.

வைரஸ் தொற்றுகள் பொதுவானவை. ஆனால், மருத்துவ கவனிப்பை புறக்கணிப்பது ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதல் இன்றிநோய் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்.

கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையிலும், தொண்டைப்புண், காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *