மக்களே அவதானம்! 9 மாவட்டங்களில் நாளை கடும் வெப்பம்!!

நாட்டில் 9 மாவட்டங்களில் நாளை (23) கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, புத்தளம், குருநாகல், ஹம்பாந்தோட்டை ,மொனராகலை ஆகிய மாவட்டங்களில்  கடும் வெப்பம் நிலவவுள்ளது.

எனவே,  மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும்,அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் அதிக நீரை பருகுமாறும் நிழலான இடங்களில் தரித்திருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *