ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவில்லையெனில் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

” ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்து நட்டத்தை சந்திக்க முடியாது.

எனவே நிறுவனத்தின் 49 வீதமான பங்குகளை வேறு தரப்பினருக்கு மாற்றி கூட்டு முயற்சியாக நடத்த உத்தேசித்துள்ளோம்.

“நாங்கள் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடனில் இருக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *