மோடிக்கு மைத்திரி, ரணில், மஹிந்த வாழ்த்து மழை!!!

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கூட்டணி அமோக வெற்றியீட்டியுள்ளது. இந்தநிலையில், மீண்டும் பாரத தேசத்தின் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு இலங்கை ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தத்தமது ருவிட்டரில் மோடிக்கு வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *