ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடத்தி செல்ல ஜனாதிபதி ரணில் அனுமதி!
காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தொடர்ந்து போராட்டத்தை நடத்திச் செல்வதற்காக கொழும்பு 7 இல் அமைந்துள்ள விகாரமஹாதேவி பூங்காவின் ஒரு பக்கத்தை ஒதுக்கித் தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைவர்கள் முன்னிலையில் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜூலை 21ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்ததாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.