ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு 07 நாள் காலக்கெடு விதித்தது பிக்குகள் அமைப்பு!
பதவி விலக ஆயத்தமாகுங்கள்,
07 நாள் காலக்கெடு விதிக்கிறோம் இல்லையென்றால் முடிவு பாரதூரமாக இருக்கும் என துறவிகள் ( பிக்குகள்) அமைப்பு
அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய பிரச்சினைக்கு கோத்தாபய ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்க ஆகியோரினால் எந்தவொரு தீர்வும் நாட்டு மக்களுக்கு கிடைக்கவில்லை.
அதை இதை குளறிக்கொண்டு நாட்டு மக்களை ஏமாற்ற இனியும் நாம் இடம்மளிக்க போவதில்லை.
நாட்டில் மக்களை பற்றி கவலைப்படவில்லை. எனவே உடனடியாக ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய இந் நாட்டிற்கு தீர்வு தாருங்கள். இல்லை எனில் எங்களுடைய தீர்வும் கடுமையாக இருக்கும் என இவ் அமைப்பு எச்சரித்துள்ளது.