ஜனாதிபதி கோட்டா பதவி விலகினால் சஜித் பிரதமர் பதவியை ஏற்பார்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால், புதிய அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதான கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இதனைத் தெரிவித்தார்.