அளம்பிலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் கடலில் மூழ்கிப் பலி!
முல்லைத்தீவு அளம்பில், செம்மலை கடலில் நீராடச் சென்ற போது கடலலையில் காவுகொள்ளப்பட்ட நிலையில், இன்று காலை 7.30 மணியளவில் மூன்றாவது சகோதரனின் உடலமானது நாயாற்றுக்கு நேர் மேலேயுள்ள கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
பத்மநாதன் விஸ்வநாதன்( 29 வயது), பத்மநாதன் விஜித் (27 வயது), பத்மநாதன் விழித்திரன் (25 வயது) ஆகியோர் நேற்றைய தினம் நண்பர்களுடன் குறித்த கடலில் நீராடச் சென்றிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
ஏனைய இரு சகோதரர்களின் உடலங்களையும் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.