இலங்கை நெருக்கடிக்கு நிதி திரட்டும் யொஹானி!
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கென இளம் பாடகியான யொஹானி டி சில்வா ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களினை திரட்டுவதற்கு ஆரம்பித்துள்ளார்.
இப்பொழுது இந்தியாவின் மும்பையில் உள்ள அவர், “Go Fund Me”க்கு நன்கொடை அளிக்குமாறு உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியன் வியன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல தொழிலதிபர்கள் இத்திட்டத்திற்கு நிதிக்கு பங்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் யொஹானி கூறினார்