பட்டினியில் வாடும் மக்கள் இதற்கு மேல் என்னதான் தியாகம் செய்ய வேண்டும்?
” நாட்டில் மூவேளை உணவு சாப்பிட்டவர்கள், இன்று இருவேளைதான் உண்கின்றனர். ஆட்டோவில் சென்றவர்கள் தற்போது பஸ்களில் பயணிக்கின்றனர். மருந்தைக்கூட மக்கள் ஒருவேளை அருந்தும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு மேல் என்ன தியாகம் செய்ய வேண்டும்?”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
நாட்டு மக்களுக்கு இனியும் தியாகம் செய்வதற்கு ஒன்றுமில்லை. மக்கள் துன்பப்படுகின்றனர்.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.