மீண்டும் தலைவரானார் ரணில் விக்கிரமசிங்க!

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக பாலித ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று முற்பகல் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கட்சியின் தவிசாளராக வஜிர அபேவர்தனவும், உப தலைவராக அகில விராஜ்காரியவசமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைமைப்பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *