கொழும்பில் சில பகுதிகளுக்கு 24 மணிநேர நீர் வெட்டு!

குடிநீர் விநியோக குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக  சில பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, தெஹிவளை, கல்கிசை , இரத்மலானை, கொழும்பு 05 & 06, பத்தரமுல்ல, பெலவத்தை, உடுமுல்லை மற்றும் ஹிம்புட்டானை ஆகிய பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டிருக்கும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு 04 இல் குறைந்த அழுத்தத்துடன் குடிநீர் விநியோகிக்கப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *