கூலிக்கு ஆள் வைத்து தந்தையை கொலை செய்த மகன்!

மட்டக்களப்பு, கரடியனாறு பிரதேசத்தில் தனது தந்தையை கொலை செய்ய 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து  கூலிக்கு ஆள் வைத்து வெட்டி கொலை செய்த 21 வயதுடைய கூலிக்காரன் மற்றும் கொல்லப்பட்டவரின் 22 வயதுடைய மகன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று (17) வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

கடந்த  ஞாயிற்றுக்கிழமை 13ஆம் திகதி கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரலக்குளம் குடாவெட்டி வயல் பகுதியில் வேளான்மை காவலுக்காக அமைக்கப்பட்ட கொட்டகை ஒன்றில் இருந்து வெட்டுகாயங்களுடன் விவசாயியான 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான பரசுராமன் ஆறுமுகம் என்பவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த விவசாயிக்கு 3 பெண் பிள்ளைகளும் 22 வயதுடைய ஒரு ஆண் பிள்ளையுமாக 4 பிள்ளைகளின் தந்தையான மாட்டுபட்டிக்கு சொந்தக்காரரான இவர் விவசாயம் மேற்கொண்டு வருகின்றார்.

இந்த நிலையில் இவரின் 22 வயதுடைய சிந்துஜன் எனும் மகன் மதுபாவனைக்கு அடிமையாகியுள்ளதனால் மதுபானம் வாங்க தந்ததையிடம் பணம் கேட்பது மற்றும் தனது மாட்டுப்பட்டியிலுள்ள மாடுகளை திருடி விற்பது போன்ற நடவடிக்கையால் தந்தைக்கும் இவருக்கும் இடையே  தொடர்ந்து தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்து சிந்துஜன், கிரான் பகுதியைச் சேர்ந்த தனது நண்பனான இட்ணராஜா நிரோசன் என்பனை கடந்த முதலம் திகதி (01-03-2022) சந்தித்து தனது தந்தையை கொலை செய்ய 50 ஆயிரம் ரூபா பணம் தருவதாக அவனிடம் பேரம் பேசியுள்ளான். இதனைத் தொடர்ந்து அவனிடம் தொலைபேசில் பலமுறை தொடர்பு கொண்டு தந்தை கொலை தொடர்பாக வினவி வந்துள்ளான்.

இதன் பின்னர் கொலை செய்வதற்கான திட்டம் தீட்டி கடந்த மார்ச் 12ஆம் திகதி இரவு 9.00 மணியளலில் படுகொலை செய்யப்பட்ட பரசுராமன், அவரது வேளாண்மை காவலுக்காக வயலில் உள்ள கொட்டகைக்கு தனிமையில் சென்று காவலில் ஈடுபட்டுள்ளார்.

பரசுராமன் தனிமையில் சென்றிருப்பதை அறிந்த கூலிக்கு கொலை செய்ய அமர்த்தப்பட்ட இரட்ணராஜா நிரோசன் அந்த கொட்டகைக்கு சென்றுள்ளார். மகனின் நண்பனான  நிரோசனை கண்ட பரசுராமன், அவனுடன் பேசிக் கொண்டு அவனுக்கும்  இரவு உணவை கொடுத்து இருவரும் சேர்ந்து உணவு உண்டுள்ளனர்

பின்னர் இங்கிருந்த கச்சானை வறுத்து இருவரும் சாப்பிட்டு இரவு ஒரு மணியளவில்  நித்திரையாகியுள்ளான். அதன் பின்னர் பரசுராமனும் நித்திரையாகியுள்ள நிலையில் அதிகாலை 3.30 மணியளவில் கொலை செய்ய சென்ற நிரோசன் கண்விழித்து பார்த்தபோது பரசுராமன் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதை கண்டு அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து அவரின் தலையில் போட்டுள்ளான். இதில் அவர்  உயிரிழக்காததையடுத்து அவன் கொண்டு சென்ற கத்தியால் கழுத்தை வெட்டியுள்ளான் அப்போதும் அவருக்கு உயிர் போகவில்லை

அதனைத் தொடர்ந்து தனது இடுப்பிலுள்ள நாடா ஒன்றை எடுத்து அவரின் கழுத்தை சுற்றி இழுத்து நெரித்ததையடுத்து அவர் உயிரிழந்துள்ளதையடுத்து அங்கிருந்து தப்பி அதிகாலை 4.00 மணியவில் தனது நண்பனான சிந்துஜனிடம் கையடக்க தொலைபேசி ஊடாக  விடயத்தை தெரிவித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளான்.

தந்தையை கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே பேரம் பேசியவாறு பணத்தை கொடுப்பதற்காக தனது நண்பணை தேடி  14ஆம் திகதி திங்கட்கிழமை கிரான் பகுதிக்கு சென்று சந்தித்து பேசிக்கொண்டு பின்னர். இருவரும் மோட்டர்சைக்கிளில்  அங்கிருந்து வந்தாறுமூலை பகுதியிலுள்ள  நகைகக்கடை ஒன்றின் முன்னால் சென்று நண்பனை நிற்குமாறு தெரிவித்து நகைக்கடைக்கு சென்று அங்கு தங்க ஆபரணம் ஒன்றை ஈடுவைத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு அதனை கொலை செய்த நண்பணிடம் வழங்கியுள்ளான்

பேரம் பேசிய பணத்தை பெற்ற நிரோசன் அங்கு ஏற்கனவே நகைகடை ஒன்றில் 23 ஆயிரம் ரூபாவுக்கு ஈடுவைத்த  நகையை ஈட்டில் இருந்து மீட்டுக் கொண்டு அங்கிருந்து இருவரும் பிரிந்து சென்றுள்ளதாக கைது செய்யப்பட்ட இருவரிடம் பொலிசார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இந்த கொலைக்கு பயன்படுத்திய கத்தி. மற்றும் நாடா, கல் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் இந்த கொலை தொடர்பாக முதலில் கொலை செய்யப்பட்டவரின் மகனை கைது செய்து விசாரணையில் கொலையாளியான கிரானைச் சேர்ந்த நித்தி என்கிற நிரோசனை கைது செய்துள்ளதாகவும் இருவரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் கரடியனாறு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *